











இதைப் பார்த்த அடுத்த கனம்
என் மனம் பதபதைக்கிறது !
துடி துடிக்கிறது !
வலிக்கிறது!
நீங்கள் கேட்கலாம் இப்போது தான் தெரிகிறதா என்று?
ஆம்! இப்போது தான் புரிகிறது
ஏன் கடவுள் என்னை இப்படிச் செதுக்கினான் என்று
எளிமையானவனாக !
இரக்கம கொண்டவனாக!
வறுமையின் நிறம் தெரிந்தவனாக!
நேர்மையாளனாக!
குறை வயிறு உண்பவனாக!
பஞ்சு மெத்தை விரும்பாதவனாக !
அருவருப்பு விரும்புவனாக!
ஆடை அலங்கரிக்கத் தெரியாதவனாக!
கவர்ச்சி இல்லாதவனாக!
(கடவுளே) சொல்லாமல் சொல்கின்றாயோ!
காரண காரியமாகத் தான் - உன்னைப்
படைத்தேன் என்று!
காரணம் புரிந்தது !
காரியம் தெரிந்து கொள்ள விழைகின்றேன்!
கடவுள் நண்பனே!
நன்றி சொல்ல விரும்புவதில்லை
என் நண்பர்கட்கு -ஆனாலும்
நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் உனக்கு !
No comments:
Post a Comment